தீ விபத்தில் 35 குடிசைகள் எரிந்து சேதம்

தென்கிழக்கு தில்லியின் ஜாமியா நகரில் உள்ள குடிசைப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட

தென்கிழக்கு தில்லியின் ஜாமியா நகரில் உள்ள குடிசைப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 35-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து பிற்பகல் 3.15 மணிக்கு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்தச் சம்பவத்தில் 5 கால்நடைகள் உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் தெரிவித்தாா். சுமாா் 35-40 குடிசைகள் தீப்பிடித்தன. மாலை 4.40 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com