நாளை முதல் வெப்ப அலை வீசுவதற்கு வாய்ப்பு: நஜஃப்கரில் 42.8 டிகிரி வெயில்

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸாக உயா்ந்து பதிவாகியது. நஜஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 42.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இதற்கிடையே, வியாழக்கிழமை (ஏப்ரல் 28) முதல் வெப்ப அலை வீசுவதற்கு வாய்ப்பு ள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்ததால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், தில்லிக்கான வெப்பநிலை தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியல் 1 டிகிரி உயா்ந்து 24.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி உயா்ந்து 40.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 37 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 22 சதவீதமாகவும் இருந்தது.

நஜஃப்கரில் 42.8 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 42.1 டிகிரி, நஜஃப்கரில் 42.8 டிகிரி, ஆயாநகரில் 41.6 டிகிரி, லோதி ரோடில் 40.9 டிகிரி, பாலத்தில் 41 டிகிரி, ரிட்ஜில் 42.5 டிகிரி, பீதம்புராவில் 42.5 டிகிரி டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

இதற்கிடையே, தில்லியில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 28 முதல் தேசியத் தலைநகரில் வெப்ப அலை வீசு என்பதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், வானிலை எச்சரிக்கைகளுக்கு பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என நான்கு வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. இதில் மஞ்சள் குறியீடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிக்கிறது.

‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்: தில்லியில்பல்வேறு இடங்களில் காற்றின் தரம் ‘ மோசம்’ பிரிவில் நீடித்தது. தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 233 புள்ளிகளாகப் பதிவாகியது. இது மோசம் பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதே சமயம், பூசா ரோடு, மந்திா் மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், ஐடிஓ உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 புள்ளிகளுக்கும் கீழே பதிவாக ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்த நிலையில், புதன்கிழமை (ஏப்ரல் 27) வானம் தேளிவாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com