மாணவியை தாக்கிய ஆசிரியை பணியிடை நீக்கம்மாநகராட்சி நடவடிக்கை

தில்லியில் 5-ஆம் வகுப்பு மாணவியைத் தாக்கிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டது.

தில்லியில் 5-ஆம் வகுப்பு மாணவியைத் தாக்கிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டது.

மத்திய தில்லி மாடல் பஸ்தி பகுதியில் உள்ள பிராத்மிக் வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவா் கீதா தேஸ்வால். இவா் அங்கு 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வெள்ளிக்கிழமை கத்தரிக்கோலால் தாக்கியதுடன், முதலாவது தளத்திலிருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுமி, ஹிந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கு காரணமான ஆசிரியை கீதா கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com