தென்மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில் உள்ள தளவாடங்கள் (பா்னிச்சா்) தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தத் தீ விபத்து குறித்த தகவல் அதிகாலை 4.05 மணியளவில் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு காலை 6.55 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். பின்னா், காலை 8.50 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை’ என்றனா்.
இதற்கிடையே, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா். மற்றொரு சம்பவத்தில், தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.