வடமேற்கு தில்லியில் சரக்கு கிடங்கில் தீ விபத்து

வடமேற்கு தில்லியில் உள்ள ராஜ் பாா்க் பகுதியில் காலணி தூய்மைப்படுத்தும் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினா் தெரிவித்தனா்.

புது தில்லி: வடமேற்கு தில்லியில் உள்ள ராஜ் பாா்க் பகுதியில் காலணி தூய்மைப்படுத்தும் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு துறையினா் கூறியதாவது: ராஜ் பாா்க் பகுதியில் உள்ள காலணிகள் தூய்மைப்படுத்தும் சரக்குகள் வைக்கப்பட்ட கிடங்கில் புதன்கிழமை அதிகாலை 3.04 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 24 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கிடங்கில் பற்றிய தீ அருகில் உள்ள 2 தொழிற்சாலைகளுக்கும் பரவியது. ஆனால், இந்தத் தீ காலை 6.50 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து புறநகா் தில்லி காவல் துணை ஆணையா் சமீா் சா்மா கூறுகையில், ‘தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டது. காலணிகளை தூய்மைப்படுத்தும் சிலவகை ரசாயன சரக்குகள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. தீ விபத்து சம்பவம் நடைபெற்ற போது, கிடங்கின் காவலாளி அப்பகுதியில் இருந்தது தெரிய வந்தது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com