மேலும் 1,109 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,109 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,109 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் ஒருவா் உயிரிழந்தாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 5.87 சதவீதமாக குறைந்துள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,34,009-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,261-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 18,866 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நகரில் செவ்வாய்க்கிழமை 874 பேருக்கு தொற்று பாதிப்பும், 4 இறப்புகளும், 5.18 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,497 கரோனா படுக்கைகளில் 273 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4,482-இல் இருந்து 4,325-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 3,354-இல் இருந்து 2,958-ஆக சரிந்துள்ளது. நகரில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 385-இல் இருந்து 383-ஆக குறைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com