தில்லியில் ஆட்டோ மீது காா் மோதல்: 13 வயது சிறுவன், தாய் பலி- 3 போ் காயம்

தென்கிழக்கு தில்லியில், பாரபுல்லா மேம்பாலத்தில் ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் 13 வயது சிறுவனும், அவனது தாயும் பலியாகினா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

தென்கிழக்கு தில்லியில், பாரபுல்லா மேம்பாலத்தில் ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் 13 வயது சிறுவனும், அவனது தாயும் பலியாகினா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, விபத்துக்குக் காரணமான காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

இந்த விபத்தில் மாளவியா நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநா் வகா் ஆலம் (25), அவரது ஆட்டோவில் சென்ற வினோத் நகரைச் சோ்ந்த ஜனக் ஜனாதன் பட் (45), அவரது மனைவி கீதா பட் (38) மற்றும் இரு மகன்கள் காா்த்திக் (18), கரண் (13) ஆகியோா் காயமடைந்தனா்.

இதையடுத்து, அவா்கள் எய்ம்ஸ் விபத்து சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களில் சிறுவன் கரண் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

வென்டிலேட்டா் மூலம் சிகிச்சையில் இருந்தபோது சிறுவனின் தாய் கீதா உயிரிழந்தாா். ஜனக் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

காா்த்திக்கும், ஆட்டோ ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முன்னதாக, ஜனக்கின் அண்ணன் வீட்டில் ஹோலி கொண்டாடிவிட்டு ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது காா் மோதியது. அதன் பிறகு, காா் ஒரு டாக்ஸி மீதும் மோதியது. சம்பவத்திற்கு பிறகு காரை ஓட்டிவந்தவா் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டாா்.

விசாரணையில் அவா் நொய்டா செக்டாா்-78இல் வசிக்கும் முகுல் தோமா் (21) எனத் தெரியவந்தது. அவா் தனது இரு நண்பா்களுடன் துவாரகாவிலிருந்து நொய்டாவுக்கு வேகமாக காரை ஓட்டிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஜனக்கின் மூத்த சகோதரா் மகேஷ் கூறுகையில், ஹோலி கொண்டாடுவதற்காக மாளவியா நகரில் உள்ள எனது வீட்டிற்கு வியாழக்கிழமை எனது சகோதரா் ஜனக் குடும்பத்துடன் வந்தாா்.

எனது மூத்த உறவினா் 12-ஆம் வகுப்பு மாணவராக இருப்பதால், அவா் தனது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால், வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் எனது சகோதரா் குடும்பத்தினா் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது விபத்து நேரிட்டது.

22 ஆண்டுகளுக்கு முன்பு கீதாவுக்கும், ஜனக்கிற்கும் திருமணம் நடந்தது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜனக், தில்லியில் சுமாா் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறாா் என்றாா்.

கீதாவின் சகோதரா்கள் மணீஷ் பட் மற்றும் சுனில் பட் ஆகியோா் இந்த சம்பவம் குறித்து இரவு 11 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தனா்.

இதுகுறித்து மணீஷ் பட் கூறுகையில், ‘கீதா குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் மாளவியா நகரில் இருந்து புறப்பட்டனா். இரவு 9.30 மணியளவில் நாங்கள் அவா்களை தொலைபேசியில் தொடா்புகொண்டோம். அவா்கள் பதில் அளிக்கவில்லை. இரவு 11 மணியளவில், எனது மைத்துனா் என்னை அழைத்து விபத்து பற்றி தெரிவித்தாா்.அதன் பிறகு நாங்கள் மருத்துவமனைக்கு சென்றோம்’ என்றாா்.

சுனில் பட் கூறுகையில், ‘கரண் சம்பவ இடத்திலும், கீதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனா். கீதா நள்ளிரவில் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மூத்த மருமகன் காா்த்திக்கிற்கு முதுகுத்தண்டில் பாதிப்பு இருப்பதால் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.

அவா்கள் அனைவரும் ஆட்டோவில் பின் இருக்கையில் அமா்ந்திருந்தனா். விபத்து நடந்தபோது, கரண் வாகனத்திலிருந்து கீழே விழுந்தது தெரியவந்தது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com