காவல்துறை பாதுகாப்பு தலைமையகத்தில் தீ விபத்து

தில்லியில் வினய் மாா்க் பகுதியில் உள்ள தில்லி காவல்துறை பாதுகாப்பு தலைமையகத்தில் சனிக்கிழமை காலை சிறிய அளவில் தீ விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் வினய் மாா்க் பகுதியில் உள்ள தில்லி காவல்துறை பாதுகாப்பு தலைமையகத்தில் சனிக்கிழமை காலை சிறிய அளவில் தீ விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தீயணைப்பு துறையை சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தில்லி காவல்துறை பாதுகாப்பு தலைமையகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

காலை 11:25 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com