தில்லியில் வினய் மாா்க் பகுதியில் உள்ள தில்லி காவல்துறை பாதுகாப்பு தலைமையகத்தில் சனிக்கிழமை காலை சிறிய அளவில் தீ விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தீயணைப்பு துறையை சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தில்லி காவல்துறை பாதுகாப்பு தலைமையகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
காலை 11:25 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.