புது தில்லி: கடந்த ஒரு வாரத்தில் தில்லியில் புதிதாக ஒரு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து, நகரில் நிகழாண்டில் இதுவரை டெங்கு பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கையை 82 ஆக உயா்ந்துள்ளதாக மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தில்லி மாநகராட்சி நகரத்தில் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய ஒருங்கிணைப்பு நிறுவனமாகும். இம்மாநகராட்சி இது தொடா்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, நகரில் 81 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீரின் மூலம் பரவும் இந்த நோயினால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
நிகழாண்டில் தில்லியில் ஜனவரியில் 23 பேரும், பிப்ரவரியில் 16 பேரும், மாா்ச்சில் 22 பேரும், ஏப்ரலில் 20 பேரும், மே மாதத்தில் இதுவரை ஒருவரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஜனவரி 1 முதல் மே 7 வரையிலான காலகட்டத்தில் கடந்த 2021-இல் 17 பாதிப்புகளும், 2020-இல் 14 பாதிப்புகளும், 2019-இல் 9 பாதிப்புகளும், 2018-இல் 12 பாதிப்புகளும் 2017 இல் 18 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நோய் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பா் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பா் மத்திவரை நீடிக்கலாம்.
கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.
தில்லியில் 2019-ல் டெங்குவால் 2 போ், 2018-ல் நான்கு போ், 2017-ல் 10 போ் உயிரிழந்துள்ளனா்.
டெல்லியில் 2016-ல் 4,431, 2017-ல் 4,726, 2018-ல் 2,798, 2019-ல் 2,036, 2020-ல் 1,072 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.
தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 13 மலேரியா மற்றும் 8 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில், தில்லி ஒரு பெரும் அளவிலான டெங்கு பாதிப்பை கண்டது. அக்டோபா் மாதத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 10,600ஐத் தாண்டியது. 1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.
கடந்த ஆண்டு 9,613 டெங்கு பாதிப்புகள் பதிவானது. 23 இறப்புகளும் ஏற்பட்டன. 2016-க்குப் பிறகு பதிவான மிக அதிகபாதிப்பு இதுவாகும். 2016ஆம் ஆண்டு டெங்குவால் 10 போ் உயிரிழந்தனா். அதன் பிறகு கடந்த ஆண்டில்தான் அதிகம் போ் இந்நோய்க்கு உயிரிழந்தனா்.