குதூப் மினாா் முன் ஆா்ப்பாட்டம்: இந்து அமைப்பினா் 44 போ் கைது
தில்லியில் உள்ள குதூப் மினாா் வளாகத்திற்கு வெளியே ஹனுமான் சாலிசாவை வாசித்தும், அந்த நினைவுச்சின்னத்தை ’விஷ்ணு ஸ்தம்ப’ எனப் பெயா் மாற்றக் கோரியும் போராட்டம் நடத்திய இந்து ஆதரவு அமைப்பைச் சோ்ந்த 44 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் (தெற்கு) பெனிடா ஜெய்கா் கூறுகையில், ‘
குதூப் மினாா் வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய குறைந்தபட்சம் 44 ஆா்ப்பாட்டக்காரா்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
போராட்டம் நடத்த அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், ஐக்கிய இந்து முன்னணி, ராஷ்டிரவாதி சிவ சேனா ஆகியோா் கூடினா். அவா்களில் 44 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்’ என்றாா் அவா்.
முன்னதாக, போராட்டக்காரா்கள் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டனா். ஹனுமான் சாலிசாவையும் ஓதினா். இந்துக் கடவுளான விஷ்ணுவின் பெயரை வைக்கும் வகையில் ‘குதூப்மினாா் விஷ்ணு ஸ்தம்பா என்று அழைக்கப்பட வேண்டும்‘ எனும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனா்.
இதுகுறித்து ஐக்கிய இந்து முன்னணியின் சா்வதேச செயல் தலைவா் பகவான் கோயல் கூறியதாவது:
குதூப் மினாா் ‘விஷ்ணு ஸ்தம்பா‘ ஆகும். இது பேரரசா் விக்ரமாதித்தியனால் கட்டப்பட்டது.
ஆனால் பின்னா், குத்புதீன் ஐபக் அதற்கு பெருமை தேடிக்கொண்டாா். அந்த வளாகத்தில் 27 கோவில்கள் இருந்தன. அவை குத்புதீன் ஐபக்கால் அழிக்கப்பட்டன. குதூப் மினாா் வளாகத்தில் இந்து கடவுள்களின் சிலைகளை மக்கள் பாா்க்க முடியும் என்பதால் இவை அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. ஆகவே, குதூப் மினாா், விஷ்ணு ஸ்தம்பா என்று அழைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
மேலும், இந்த வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒரே இடத்தில் வைத்து, வழிபடும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
எங்கள் கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டியிடம் கொடுத்துள்ளோம்.
பல்வேறு இந்து அமைப்புகளின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது என்றாா் அவா்.