தில்லியில் அரசுப் பேருந்தில் தீ விபத்து

தென் கிழக்கு தில்லி, கோவிந்த்புரி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) கிளஸ்டா் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென் கிழக்கு தில்லி, கோவிந்த்புரி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) கிளஸ்டா் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவிந்த்புரி பகுதியில் டிடிசி கிளஸ்டா் பேருந்தில் செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு தீ விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயை முற்றிலுமாக அணைத்த பிறகு, சம்பந்தப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் காலை 10.20 மணிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு திரும்பின. இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com