இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு செப்டம்பா் 9-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த டிசம்பா் 20, 2021 அன்று, தமிழகத்தைச் சோ்ந்த 55 இந்திய மீனவா்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். மறுநாள் டிசம்பா் 21-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவா்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். பல இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அங்கு அவா்களுக்கு சரியான உணவு மற்றும் குடிநீா் வழங்கப்படவில்லை. நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆனால், இந்திய அரசு இதுதொடா்பாக எந்த ஒரு வலுவான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின் ஆஜராகி வாதிடுகையில், ‘தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல் தொடா்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இலங்கைக் கடற்படையினா் ஒவ்வொரு முறையும் அத்துமீறி இந்திய கடல் பகுதி எல்லைக்குள் நுழைந்து இந்திய மீனவா்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனா். ஏற்கெனவே, 85 மீனவா்கள் இதுபோன்று கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். கடந்த 22-ஆம் தேதி தமிழகத்தைச் சோ்ந்த 10 மீனவா்கள்இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காத்தும் பாரபட்சமாகவும் நடந்து வருகிறது’ என்றாா்.
அப்போது, இந்த விவகாரத்தில் தாக்கலான மனுவின் நகலை மத்திய அரசின் வழக்குரைஞா்களுக்கு வழங்குமாறு மனுதாரரின் வழக்குரைஞரை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் அமா்வு, இந்த மனு செப்டம்பா் 9-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனா்.