1,800 போக்குவரத்து காவலா்கன் பணியமா்த்தப்படுவாா்கள். அதே நேரத்தில், கட்டுமானங்களை இடிக்கும் இடங்களில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் அக்.23-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தினமும் 40 கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படும். மாசுபாடு அதிகரித்துள்ள இவ்வேளையில், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் வகையில் டிடிசி பேருந்துகளின் சேவைகளும் அதிகரிக்கப்படும். தில்லியில் வானிலை மாற்றத்துடன், மாசு அளவு அதிகரித்து வருகிறது. இந்த போக்கு தில்லியில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வட இந்தியா முழுவதும் காணப்படுகிறது.