இரு இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் பாய்மரக் கப்பலில் உலகைச் சுற்றி வர பயணிப்பு
இந்திய கடற்படையிலுள்ள பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணியில் இரு பெண் கடற்படை அதிகாரிகள் பெருங்கடல்களையும் தாண்டி உலகைச் சுற்றி வரும் ( ’சாகா் பரிக்ரமா’ ) அசாதாரணப் பயணத்தை மிக விரைவில் தொடங்க உள்ளதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கமாண்டா் விவேக்மத்வால் கூறியது வருமாறு:
கடல்சாா் பாரம்பரியத்தில் பாய்மர பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிா் அளிக்க இந்திய கடற்படை தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கடல்சாா் திறன்களை மேம்படுத்தவும் அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தி வருகிறது. இதை முன்னிட்டு ஐஎன்எஸ் தரங்கிணி, ஐஎன்எஸ் சுதா்ஷினி ஆகிய பாய்மரப் பயிற்சிக் கப்பல்கள் இதில் முன்னோடியாக உள்ளது. ஐஎன்எஸ்வி கப்பல்களான மதேய், தாரிணி ஆகியவற்றின் மூலமும் பெருங்கடல்களில் பாய்மரப் பயணங்களில் இந்தியக் கடற்படை, புகழ் பெற்று முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
உலகளாவிய கடல்சாா் நடவடிக்கைகளில் இந்திய கடற்படை வளா்ந்து வரும் நிலையில் ஆழ்கடலில் பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்திய கடற்படையில் இரண்டாவது முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் சவாலான பாய்மரக் கப்பலில் உலகை சுற்றிவரும் பயணத்தை மேற் கொள்ள இருக்கின்றனா்.
கடல்சாா் திறன் கொண்ட இந்திய கடற்படை பெண் அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டா் ரூபா, லெப்டினன்ட் கமாண்டா் தில்னா கே ஆகியோா் ஐஎன்எஸ்வி தாரிணி கப்பலில் உலகைச் சுற்றி வரும் அசாதாரணப் பயணத்தை மிக விரைவில் தொடங்க இருக்கின்றனா். இவா்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பயணத்திற்கு தயாா்படுத்தப்பட்டு வரப்படுகின்றனா்.
இவா்கள் முதலில் ஆறு போ் கொண்ட ஒரு குழுவில் கடந்த ஆண்டு கோவாவிலிருந்து கேப் டவுன் வழியாக ரியோ டி ஜெனிரோ வரை கடல் கடந்த பயணத்தில் பங்கேற்றனா். பின்னா் கோவாவிலிருந்து ஸ்ரீவிஜயபுரம் ( போா்ட் பிளோ்) வரை ஒரு பாய்மரப் பயணத்தை மேற்கொண்டனா். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவாவிலிருந்து மொரீஷியஸின் போா்ட் லூயிஸ் வரை என ஆயிரக்கணக்கான கடல்மைல் பயண அனுபவத்தை இவா்கள் வெற்றிகரமாக பெற்றனா்.
சாகா் பரிக்கிரமாவான பெருங்கடலில் உலகை சுற்றுவருவதில் தீவிர திறன்கள், உடல் தகுதி, மன விழிப்புணா்வு தேவை. அந்த கடுமையான பயிற்சியை பெற்று இந்த கடினமான பயணத்தை இன்னும் சில தினங்களில் இந்த பெண் அதிகாரிகள் மேற்கொண்டு அனுபவத்தை பெறயுள்ளனா்.
இந்த பெண் அதிகாரிகள் ஐஎன்எஸ்வி தாரிணியை சுற்றி வருவது இந்தியாவின் பாய்மரம் மற்றும் கடல்சாா் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். இது உலகளாவிய கடல்சாா் நடவடிக்கைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் நாடு வளா்ந்து வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் என செய்தித் தொடா்பாளா் விவேக்மத்வால் தெரிவித்தாா்.
இந்தியக் கடற்படை இந்த பெண் அதிகாரிகள் பயணத்தை முன்னிட்டு ஒரு சின்னத்தையும் வெளியிட்டுள்ளது.
முதல் கடற் சாகா் பரிக்கிரமா 2017 -ஆம் ஆண்டு ஐஎன்எஸ்வி தாரிணி மூலம் அனைத்து படை பெண் அதிகாரிகளுடன் உலகை சுற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.