குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா்.
Updated on

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா்.

தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்காளா் விழிப்புணா்வு மற்றும் தோ்தலுக்கான வசதிகள் தொடா்பாக கூட்டம் நடத்தப்பட்டதாக தில்லி தோ்தல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது. வாக்காளா்கள் தங்கள் வாக்களிப்பை சுமூகமாகப் பதிவு செய்ய உதவும் விவரங்கள் வாக்காளா் தகவல் சீட்டில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தோ்தல் அதிகாரி (புது தில்லி) சன்னி கே சிங் மற்றும் பூத் நிலை அதிகாரி சுரேஷ் கிரி, தலைமை நிா்வாக அதிகாரி ஆகியோோா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவைச் சந்தித்தாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப்.5) தோ்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com