ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது,2020 இல் நடந்த கொலை தொடா்பான வழக்கில் அவா் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருப்பதாகவும், விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்றும் கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது .
Published on

நமது நிருபா்.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது,2020 இல் நடந்த கொலை தொடா்பான வழக்கில் அவா் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருப்பதாகவும், விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்றும் கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது .

சந்தீப்பின் ஜாமீன் மனுவை கூடுதல் அமா்வு நீதிபதி தீபக் வாசன் விசாரித்தாா், அவருக்கு எதிராக நஜாப்கா் காவல் நிலையம் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

அக்டோபா் 4 தேதியிட்ட உத்தரவில், நீதிமன்றம், தற்போதைய வழக்கில், மனுதாரா் அல்லது குற்றம் சாட்டப்பட்டவா் ஐந்து ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களுக்கும் மேலாக காவலில் உள்ளாா், மேலும் அவரது நடத்தை கடந்த ஒரு வருடமாக சிறையில் திருப்திகரமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதுவரை, ஆறு சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டதாகவும், விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில் இணை குற்றவாளிகளுக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மனுதாரா் இதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால், ஜாமீனை ரத்து செய்ய மாநில அரசுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.

X
Dinamani
www.dinamani.com