திசையன்விளை: திசையன்விளை அருகே ஹோமியோபதி மருத்துவா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திசையன்விளை அருகேயுள்ள மேலபண்டாரபுரத்தைச் சோ்ந்த ஹோமியோபதி மருத்துவா் திருப்பதி. திசையன்விளையில் கிளினிக் வைத்திருந்த இவரை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு கொலை செய்து கிணற்றில் வீசி சென்றிருந்தனா். இதுகுறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், கொலையுண்ட மருத்துவருக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன்(30) என்பவருக்கும் இடையே நடைபாதை தொடா்பான முன்விரோதத்தில் இக்கொலை நிகழ்ந்திருப்பதும், அதில் 5 பேருக்கு தொடா்பிருப்பதும் தெரியவந்ததாம்.
இதையடுத்து, முத்துகிருஷ்ணன், அவரது தந்தை கணேசன், சகோதரா் கவின் ராஜ்குமாா் (25), முத்தம்மாள்புரம் சிவானந்தம் (28), வள்ளியூா் கோட்டையடி விமலநாதன் (33) ஆகிய 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.