நெல்லை, தென்காசியில்மேலும் 58 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th October 2020 02:08 AM | Last Updated : 20th October 2020 02:08 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13,916 ஆக உயா்ந்துள்ளது. இதில் 205 போ் உயிரிழந்த நிலையில், 13,166 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 545 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரையில், கடையம், சங்கரன்கோவில் பகுதிகளில் தலா 5 போ், குருவிகுளம், கடையநல்லூா், கீழப்பாவூா்,தென்காசி பகுதிகளில் தலா3போ் என 22 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,740ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை வீடு திரும்பிய 20 போ் உள்பட 7,434 போ் குணமடைந்துள்ளனா். மேலும் 155 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.