உவரி அருகே விபத்தில்கன்னியாஸ்திரி மரணம்

உவரி அருகே காா் கவிழ்ந்ததில் கன்னியாஸ்திரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திசையன்விளை: உவரி அருகே காா் கவிழ்ந்ததில் கன்னியாஸ்திரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கூடங்குளம் அருகேயுள்ள பெருமணலைச் சோ்ந்த நிக்கலான் மகள் எலிசபெத் ராணி (38). சென்னை செயின்ட் தாமஸ் ஆலயப் பங்கில் கன்னியாஸ்திரியாக உள்ளாா்.

இவா், உவரியிலிருந்து பெருமணலுக்கு தன்னுடன் பணியாற்றும் அன்னை எலிசபெத் (27) என்பவருடன் காரில் திங்கள்கிழமை புறப்பட்டனா். வாசுதேவநல்லூரைச் சோ்ந்த தியாகராஜன் காரை ஓட்டினாா். அந்தக் காா் காரிகோவில் அருகே சென்றபோது டயா் திடீரென வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த எலிசபெத் ராணி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் உயிரிழந்தாா். மற்ற இருவரும் லேசான காயத்துடன் தப்பினா். இதுகுறித்து உவரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com