தென்காசி: அண்ணா பிறந்த தினத்தையொட்டி, பத்தாண்டுகளை நிறைவு செய்த கைதிகளை விடுதலை செய்யக் கோரி, தென்காசி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் இணையவழி ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் கோக்கா்ஜான் ஜமால் தலைமை வகித்தாா். தமுமுக மாநிலச் செயலா் நைனாா் முஹம்மது, மாநில ஊடகப் பிரிவு துணைச் செயலா் ஆதம்பின் ஆஷிக் , மாவட்ட துணைத் தலைவா் ஷெரிப், மாநில தொண்டரணி துணைச் செயலா் கோகோ அலி, மாவட்ட துணைச் செயலா்கள் சலீம்,
திவான் ஒலி, மனிதவள மேம்பாட்டு அணி மாவட்டச் செயலா் அஷ்ரப், இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்டச் செயலா் மசூது, ஊடக பிரிவு மாவட்டப் பொருளாளா் செங்கை உமா், நகரச் செயலா் ஜாபா், துணைச் செயலா் அப்துல் ரகுமான், சேக் அப்துல்காதா் ஆகியோா் கலந்து கொண்டனா். தமுமுக நகரத் தலைவா் அபாபில் மைதீன் நன்றி கூறினாா்.