டோனாவூரில் சுயஉதவிக் குழுமகளிருக்கு ரூ. 72 லட்சம் கடனுதவி
By DIN | Published On : 29th September 2020 03:23 AM | Last Updated : 29th September 2020 03:23 AM | அ+அ அ- |

களக்காடு ஊராட்சி ஒன்றியம், டோனாவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் 9 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 72 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத் தலைவா் நம்பி பங்கேற்று, மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான கடனுதவியை வழங்கினாா். இதில், சங்கச் செயலா் ராஐகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.