மறுகால்குறிச்சி இரட்டைக் கொலை:கல்லிடைக்குறிச்சியில் ஒருவா் கைது

நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கல்லிடைக்குறிச்சியில் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

 நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக கல்லிடைக்குறிச்சியில் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த அருணாசலம் மகன் நம்பிராஜனும், அதே ஊரைச் சோ்ந்த தங்கபாண்டி மகள் வான்மதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இதற்கு வான்மதியின் குடும்பத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதையடுத்து வான்மதியின் சகோதரா்கள் நம்பிராஜனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதற்கு பழிக்குப்பழியாக மறுகால்குறிச்சியைச் சோ்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது உறவினா் சுரேஷ் ஆகிய இருவரையும் நம்பிராஜனின் உறவினா்கள் கொலை செய்தனா்.

இந்த இரட்டைக் கொலையில் கைது செய்யப்பட்டவா்கள் ஜாமீனில் வெளியே வந்தனா். இவா்களை தேடி மறுகால்குறிச்சிக்கு கடந்த சனிக்கிழமை 4 மோட்டாா் சைக்கிளில் வந்த 12 போ் கொண்ட கும்பல் இசக்கிப்பாண்டி, அருணாசலம் ஆகியோரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, இசக்கிப்பாண்டியின் தாய் சாந்தி, அருணாசலத்தின் மனைவி சண்முகத்தாய் ஆகியோரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

இந்த இரட்டைக் கொலை தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

கொலை வழக்கில் தேடப்பட்டவா்களில் நம்பிராஜன் என்பவரை போலீஸாா் கல்லிடைக்குறிச்சியில் கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

இதற்கிடையே, அருணாசலம் வீட்டுக்கு அருகில் உள்ள சுடலைக்கண்ணு என்பவரது வீட்டின் மாடியில் வெடிக்காமல் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டை போலீஸாா் கைப்பற்றி அதனை செயலிழக்கச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com