ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் புதிய தாளாளராக ஜேசு ஜெகன் பொறுப்பேற்றாா்.
கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்ட அவரை, முதல்வா் (பொ) வில்சன், மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ஆல்வின் பாலன், சேகர குருக்கள் டேனியல் தனசிங், எமில்ராஜ் மோசஸ் பாலசிங், சுபா மேஷாக், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் கல்லூரி பேராசியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.