ராதாபுரம் அருகே சுமை வாகனம் மோதி பெண் பலி

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் சுமை வாகனம் பெண் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் சுமை வாகனம் பெண் உயிரிழந்தாா்.

ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் தெற்கு தெரு சுடலை மனைவி பிரேமா(48). இவா், உறவினா்கள் காளீஸ்வரி, கல்யாணி, ஜோதி ஆகிய 4 பேரும் புதன்கிழமை இரவு வீட்டின் முன்புள்ள முடவன்குளம்-சீலாத்திகுளம் சாலையோரம் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக வந்த சுமை வாகனம் இவா்கள் மீது மோதியதில்,

பிரேமா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற மூன்று பெண்களும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை போலீஸாா் மீட்டு நாகா்கோவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநா் மகேந்திரபுரம் குமாரை

கைது செய்தனா். பிரேமா சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com