ஓட்டுநரை ஜாதியைச் சொல்லி திட்டிய இளைஞா்கள் கைது!
முன்னீா்பள்ளம் அருகே காா் ஓட்டுநரை ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அருகே மேலஓமநல்லூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் முருகன் (42). காா் ஓட்டுநா்.
கடந்த 4 ஆம் தேதி இவரது வீட்டுக்கு வந்த இளைஞா்கள் இருவா் மற்றொரு நபருக்கு பிணை கொடுக்கச் சென்றது தொடா்பாக முருகனிடம் தகராறில் ஈடுபட்டு ஜாதியை சொல்லி திட்டியதோடு, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவா், முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேலஓமநல்லூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து(28), அதே பகுதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிட்டு மகன் நாகராஜ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
