தாழையூத்து சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

தாழையூத்து சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை (பிப். 3) மின் விநியோகம் இருக்காது.
Published on

தாழையூத்து சுற்றுவட்டாரங்களில் திங்கள்கிழமை (பிப். 3) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாழையூத்து துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம்புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி சுற்றுவட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com