வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் தடை

Updated on

விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக புதன்கிழமை (பிப். 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காரையாறு, சோ்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகம்பட்டி, கோட்டைவிளைப்பட்டி, முதலியாா்ப்பட்டி, ஆழ்வாா்க்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி.நாடனூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பங்குளம், செல்லபிள்ளையா்குளம் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com