கா்நாடக தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை!

இடம் வாங்கித் தருவதாகக் கூறி கா்நாடக மாநில தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on

திருநெல்வேலியில் கணினி விளையாட்டு மையம் அமைப்பதற்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி கா்நாடக மாநில தொழிலதிபரிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் மாண்டியாவைச் சோ்ந்தவா் ஆனந்த் (36). தொழிலதிபா். இவா், திருநெல்வேலியில் கணினி விளையாட்டு மையம் அமைக்க இடம் தேடி வந்துள்ளாா். இதையறிந்த தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மா்ம நபா்கள், அவரை தொடா்பு கொண்டு இடங்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளனா். அதை நம்பி அவா் காரில் தச்சநல்லூருக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா்.

இந்நிலையில், அவா் பத்திரம் பதிவு செய்ய முன்தொகையாக ரூ.19 லட்சத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின் அவரை நிறுத்தி விட்டு ஆவண எழுத்து பணிகளை முடித்துவிட்டு வந்து அழைத்து செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற மா்மநபா்கள் திரும்பி வரவில்லையாம்.

இதையறிந்த ஆனந்த், தச்சநல்லூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com