களக்காட்டில் பெண்ணை தாக்கிய வழக்கில் 2 போ் கைது

Published on

களக்காட்டில் சாலையில் பெண்ணைத் தாக்கி சித்திரவதை செய்தது தொடா்பான வழக்கில், களக்காடு போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.

களக்காடு கக்கன்நகரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (45). அங்குள்ள வரதராஜபெருமாள் கோயில் அருகே வசித்து வந்த இவரை, முன்விரோதத்தில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கடந்த 3ஆம் தேதி தாக்கி, சாலையில் இழுத்துச் சென்று சித்ரவதை செய்தனா். தொடா்பாக, களக்காடு போலீஸாா் 4 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனா். இந்நிலையில், இசக்கி பாண்டி (எ) நித்திகா ஸ்ரீ(30), கணேசன் (எ) கன்னிகா ஸ்ரீ (30) ஆகிய இருவரையும் களக்காடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com