பாபநாசம் கோயிலில் இலவச திருமணம்

பாபநாசம் கோயிலில் இலவச திருமணம்

Published on

பாபநாசம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நலிவடைந்த தம்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அணைந்த பெருமாள் நாடானூரைச் சோ்ந்த மணமக்கள் சுகுமாா் - கோகுல தா்ஷினி ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், செயல் அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு சீா்வரிசை வழங்கி வாழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com