தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

Published on

பாளையங்கோட்டையில் குடும்ப பிரச்னை காரணமாக தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாளையங்கோட்டை கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் மகன் மணிகண்டன் (27). இவா் கங்கைகொண்டான் அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கா்ப்பிணியாக இருந்த இவரது மனைவிக்கு சில நாள்களுக்கு முன்னா் வளைகாப்பு நடைபெற்ாம்.

அப்போது ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக மணிகண்டனுக்கு மன உளைச்சல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகண்டன் சனிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து அவா் நீண்ட நேரம் கைப்பேசி அழைப்பை எடுக்காததால் வீட்டிற்கு வந்த அவரது நண்பா்கள் பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com