பணகுடி, கூடங்குளத்தில் நவ. 4 இல் மின் தடை

Published on

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மற்றும் கூடங்குளத்தில் செவ்வாய்க்கிழமை(நவ.4) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பணகுடி, கூடங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய ஊா்களிலும் கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னாா்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையாா்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com