மீன்பிடி வள்ளம் பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்த குளச்சல் மீனவர்களை தூத்தூர் மீனவர்கள் காப்பாற்றிக் கரைசேர்த்தனர்.
குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பிரட் (40). இவருக்குச் சொந்தமான வள்ளத்தில் ஆல்பிரட்டும், அதே பகுதியைச் சேர்ந்த மரியநாயகம் (60), அவரது மகன் பெபியான்ஸ் (33) ஆகியோரும் வெள்ளிக்கிழமை மாலை மீன்பிடிக்கச் சென்றனர்.
சனிக்கிழமை காலையில் இவர்கள் சுமார் 18 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துவிட்டு கரைதிரும்பியபோது வள்ளத்தில் உள்ள என்ஜின் திடீரென பழுதானதாம். மேலும் காற்று பலமாக வீசியதால் இவர்களால் கரைதிரும்ப முடியவில்லை. இதையடுத்து ஆல்பிரட் தனது தம்பி ஜானுக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் தனியாக விசைப்படகில் கடலுக்குச் சென்று மீனவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அருகே சென்று கொண்டிருந்த தூத்தூர் மீனவர்களுக்கு சைகை மூலம் தகவல் தெரிவித்து காப்பாற்ற கேட்டுக்கொண்டனர். தூத்தூர் மீனவர்கள் பழுதான வள்ளத்தை தங்கள் விசைப்படகில் கட்டி மீனவர்களைக் காப்பாற்றி கரைசேர்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்; குஜராத்தும் இடம் பிடித்தது: வெளியேறும் நிலையில் சென்னை

சமூக ஊடக பிரசாரத்தில் உஷாராக இருப்போம்: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்

அவிநாசியில் 2-ஆம் குடிநீா்த் திட்டத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்: எம்எல்ஏ கமலி

கொடைக்கானலில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
