அதிமுகவினர் மும்மத பிரார்த்தனை
By தக்கலை | Published on : 16th October 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை.ôக வேண்டி, பத்மநாபபுரம் நகர அதிமுக சார்பில் மும்மத பிரார்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
பத்மநாபபுரம் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு நீலகண்டசுவாமி திருக்கோயிலிலும், அரண்மனை சாலையில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திலும், தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா தர்ஹாவிலும் அதிமுகவினர் மும்மத பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் நகரச் செயலர் ஏ.எஸ்.ஜெகபர்சாதிக் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி, துணைத் தலைவர் பீர்முகம்மது, மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், துணைச் செயலர் கே.ஏ.சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியச் செயலர் ஜார்ஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.