தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஒக்கி புயல் பாதிப்பு: 6005 ஹெக்டேரில் விவசாய நிலங்கள் பாதிப்பு-வேளாண்மை முதன்மைச் செயலர்

ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6005  ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை மற்றும் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:26 pm

DIN

ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6005  ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை மற்றும் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இயக்குநர் மனோகரன் மற்றும் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவினர் குமரி மாவட்டம்  கல்படி, பத்மநாபபுரம்,  சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் விவசாயப் பாதிப்புகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
இலுப்பைக் கோணம் பகுதியில் பாதிக்கப்பட்ட ரப்பர் மரங்களை ஆய்வு செய்தனர். அப்பகுதியைச் சேர்ந்த ரப்பர் விவசாயிகள் மத்தியக் குழுவினரிடம் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவித்தனர்.
அப்போது, ரப்பர் மரங்கள் பாதிப்புக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றாலம்,  பாபநாசம் போன்ற பகுதிகளில் இருந்து குரங்குகளை இங்கு விட்டு சென்று விடுவதால், அவை தென்னை,  மரச்சீனிகளை நாசம் செய்து விடுகின்றன. எனவே, நாங்கள் ஊடுபயிர்கள் பயிரிடுவதில்லை என விவசாயி ஜகபர் சாதிக் தெரிவித்தார்.
இதையடுத்து ககன்தீப் சிங் பேடி கூறியது: புயலால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை மற்றும் விவசாயப் பயிர்கள் குறித்து பார்வையிட்டு வருகிறோம். இம்மாவட்டத்தில் 6005 ஹெக்டேரில் தோட்டக்கலை மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 1,600 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 1 ஹெக்டேர் விவசாய தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை இழப்பீடு பெற்றுத் தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்டவர்கள் விடுபட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.