கருங்கல், வேங்கோடு வட்டார கத்தோலிக்க சங்க அமைப்புக் கூட்டம் புதுக்கடையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கத்தோலிக்க சங்க குழித்துறை மறைமாவட்டத் தலைவர் பிரைட் சேவியர் தலைமை வகித்தார். மறைமாவட்ட இயக்குநர் டோமினிக் கடாட்சதாஸ், வேங்கோடு வட்டார முதன்மை அருள்பணியாளர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைமாவட்டச் செயலர் ஆனி ஜீவரேகா வரவேற்றார். புத்தன்கடை வட்டாரச் செயலர் கிறிஸ்டல் அமுதா, மாத்திரவிளை வட்டாரச் செயலர் பயஸ், மார்த்தாண்டம் வட்டாரத் தலைவர் ராஜேந்திரபாபு, முளகுமூடு வட்டாரச் செயலர் ராஜேந்திரராஜ் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், வட்டாரத் தலைவராக அமலதாஸ், செயலராக லூனா, பொருளாளராக ஆனந்த், துணைத் தலைவராக கிறிஸ்டோபர், துணைச் செயலராக சேம்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மறைமாவட்டத் தலைவர் பிரைட் சேவியர், பொருளர் ஜெஸ்டின் ராஜ், காரங்காடு வட்டாரத் தலைவர் அருள்தாஸ், செயலர் ஜெஸ்டஸ் ரோக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மறை மாவட்ட துணைத் தலைவர் ரைமண்ட் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.