கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

அருமனை அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

அருமனை அருகே கிணற்றில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அண்டுகோடு நெடுவிளையைச் சேர்ந்தவர் ரவிஷ் குமார் (36). கட்டடத் தொழிலாளியான இவர், வியாழக்கிழமை வீட்டு அருகே உள்ள கிணற்றின் மதிற்சுவரில் அமர்ந்திருந்தாராம். அப்போது அவர் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை மீட்கும் முயற்சியில் குழித்துறை தீயணைப்பு நிலையத்தினர் ஈடுபட்டனர். இதற்கிடையே அவர் உயிரிழந்தார்.  தகவலறிந்து வந்த அருமனை போலீஸார் சடலத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ரவிஷ்குமாருக்கு பிந்து மோள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com