மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டது.
பிறருடன் பேசி தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ள மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் ரூ. 25,000 மதிப்பிலான பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு மென்பொருளுடன் கூடிய கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண், மனவளர்ச்சி குறைபாடு உடைய ஆரம்ப நிலை பயிற்சி மையத்துக்கு கையடக்க கணினிகளை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.