கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலர் நாகேஸ்வரகாந்த் முன்னிலை வகித்தார்.
குமரி மாவட்டத்தில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டத் தீர்மானங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், பொருளாளர் ஈஸ்வரி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், துணைச் செயலர் விஜின், இணைச் செயலர் சிபுகுமார், சிவகுமார், ஆன்றனி, செந்தில்கார்த்திகேயன் உள்பட திரளானோர்
கலந்து கொண்டனர்.