வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
கல்லூரித் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்தார்.
செயலர் கிளாரிசா வின்சென்ட் விளையாட்டு வீரர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார். கல்லூரி முதல்வர் ஜெபசோனியா வரவேற்றார். தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர், போட்டிகளிள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி நீதிபதி சிறப்புரையாற்றினார்.
ஏற்பாடுகளை கல்லூரித் துறைத் தலைவர்கள் டயானா, ஷாஜினி, பிரியா, வர்ஷா, உஷாராணி ஆகியோர் செய்திருந்தனர்.