நாகர்கோவில் கோட்டாறு ராஜகோகிலா அரங்கத்தில் கொலு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, ராஜகோகிலா அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில் விநாயகர், சிவன், கிருஷ்ணர், முப்பெருந்தேவியர் உள்ளிட்ட தெய்வ திருஉருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை துணைத்தலைவர் அனுசியாசெல்வி செய்திருந்தார்.