16 இல் புத்தேரியில் முன்னோடி மனு நீதி நாள் முகாம்: ஆட்சியர் தகவல்

புத்தேரியில் மனுநீதித் திட்ட மனுக்கள் பெறும் முன்னோடி மனு நீதிநாள் முகாம்  செவ்வாய்க்கிழமை (அக்.16)   நடைபெறுகிறது.

புத்தேரியில் மனுநீதித் திட்ட மனுக்கள் பெறும் முன்னோடி மனு நீதிநாள் முகாம்  செவ்வாய்க்கிழமை (அக்.16)   நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தேரி ஊராட்சி பகுதிக்கான மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமையொட்டி,  மனுக்கள் பெறுவதற்கான முன்னோடி மனு நீதி நாள் முகாம் புத்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில்  அக்.16  ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது.
    இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து குமரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இறச்சகுளம் பகுதி பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com