சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி  முகாம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்ட சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள்  பயிற்சி முகாம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்ட சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள்  பயிற்சி முகாம்  சுங்கான்கடை  வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது. 
மத்தியஅரசு சிபிஎஸ்இ-யின் கீழ் ஏழு சென்டர் ஆப் எக்சலண்ட்ஸ்  பயிற்சி நிலையங்கள்உள்ளன.  இதில் தென் மாநிலத்திற்கு  சிஓசி பயிற்சி நிறுவனம்  சென்னையில் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி நிலையம்  தென்மாவட்டங்களுக்கான பயிற்சி முகாமை சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் நடத்தியது.  இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டம்,  சாத்தூர், பகுதிகளில் இருந்து  சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள்  பங்கேற்றனர்.  
கோயம்புத்தூர்  ஸ்டேன்ஸ் பள்ளி முதல்வரும், சிஓசியின் தலைவருமான பெஞ்சமின்  குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்து,   பயிற்சி அளித்தார். முகாமில் ஆசிரியர் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில்  பல்வேறு செயல் முறைகள் நடத்தப்பட்டன. பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட  ஆசிரியர்களுக்கு  கையேடுகள்  வழங்கப்பட்டன. பின்னர் வினாத்தாள் தயாரிப்பு, கற்பித்தல் முறைகள், வகுப்பறை மேலாண்மை,  வினாத்தாள் ஆய்வு, இணைந்து செயல்படுதல், ஆசிரியர் மாணவர் உறவு , உரையாடல்  முதலான கருத்துக்களின் அடிப்படையில்  கலந்துரையாடலும் நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சிக்கு வின்ஸ் கல்வி குழுமத்  தலைவர் நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்து,  பயிற்சிமுகாமில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.   முதல்வர்  லதா வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை பெனிசயா தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com