நாகர்கோவிலில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஏழை இந்து மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை பெற்றுத் தராத பாஜகவை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏழை இந்து மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை பெற்றுத் தராத பாஜகவை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பிரின்ஸ் எம்எல்ஏ ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்  ஏமாற்றி விட்டதாகவும், ஜூலை போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றிய மத்திய இணை  அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், நாகர்கோவில் நகர காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ், மாவட்ட துணைத் தலைவர் மகேஷ்லாசர், மகளிர் அணி மாவட்டத் தலைவர் தங்கம் நடேசன்,  மாவட்ட ஓ.பி.சி. பிரிவு துணைத் தலைவர் டாக்டர் அனிதா, வட்டாரத் தலைவர்கள் காலபெருமாள், ஜெரால்டு கென்னடி, வைகுண்டதாஸ், கிளாட்சன், நிர்வாகிகள் யூசுப்கான், சேவியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com