இரவிபுதூரில் இன்று முன்னோடி மனு நீதி நாள்
By DIN | Published on : 12th September 2018 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இரவிபுதூரில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (செப். 12) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் வட்டம், இரவிபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமில் மனுக்கள் பெறும் முதல்கட்ட நிகழ்ச்சி செப். 12ஆம் தேதி (புதன் கிழமை) காலை 10 மணி முதல் பிற்கபல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, அப்பகுதி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.