கேரளத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ரூ. 15 லட்சம் நிவாரண நிதி

கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு  ரூ. 15 லட்சம் நிதி வழங்கினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு  ரூ. 15 லட்சம் நிதி வழங்கினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து, அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
கேரள மாநில வெள்ள நிவாரண  நிதிக்காக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது ஒரு மாத ஊதியம் மற்றும் மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை சந்தித்துப் பேசிய அவர், குமரி மாவட்டத்தில் 100 படுக்கைகள் வசதியுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனைப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com