மார்த்தாண்டம் அருகே பல்பொருள் அங்காடியில் தீ விபத்து
மார்த்தாண்டம் அருகே வெள்ளிக்கிழமை பல்பொருள் அங்காடியில் தீ விபத்து ஏற்பட்டது.
கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (45). இவர் மார்த்தாண்டம், வடக்குத் தெரு பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல கடையை அடைத்துச் சென்றாராம். இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் கடையிலிருந்து புகை வெளியேறியதாம். இதைக் கண்ட அப்பகுதியினர் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும், சந்திரனுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் உள்பட பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகவும், சேத மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.