ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது

குலசேகரம் அருகே மங்கலம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:03 am IST

குலசேகரம் அருகே மங்கலம் பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து திருவிழா ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பஞ்ச கவ்ய அபிஷேகம்,  களபாபிஷேகம்,  நவகலச அபிஷேகம் நடைபெற்றது.  மாலையில் அலங்கார தீபாராதனையும்,  அத்தாழ பூஜையும் நடைபெற்றது. இக்கோயிலில்  2 ஆம் நாள் திருவிழாவான திங்கள்கிழமை மாலையில் அம்மன் யானை மீது எழுந்தருளல் நடைபெறுகிறது.  4 ஆம் நாள் திருவிழாவான புதன்கிழமை நாகரூட்டு நடைபெறுகிறது. 
நிறைவு நாளான  மார்ச் 5 ஆம் தேதி காலையில் பொங்காலை வழிபாடு நடைபெறுகிறது. தொடர்ந்து நேர்ச்சைகளும், மாலையில் ஆறாட்டு கலசபூஜையும், ஆறாட்டும் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.