களியக்காவிளை அருகே வீடு புகுந்து நகை திருட்டு

களியக்காவிளை அருகே பளுகல் பகுதியில் வீடு புகுந்து 8 பவுன் தங்க நகைகள் மற்றும்  பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்

களியக்காவிளை அருகே பளுகல் பகுதியில் வீடு புகுந்து 8 பவுன் தங்க நகைகள் மற்றும்  பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
வன்னியூர் கிடாரக்குழி பகுதியைச் சேர்ந்தவர் செல்வசிங்.  தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணி செய்து வருகிறார்.  இவரது மனைவி ஜெபா (35).  இவர்,  செவ்வாய்க்கிழமை பகலில் வீட்டை பூட்டிவிட்டு, மின்கட்டணம் செலுத்த களியக்காவிளை மின்வாரிய அலுவலத்துக்கு சென்றிருந்தாராம்.  பின்னர் அவர் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள் அலமாரியில் வைத்திருந்த 2 தங்கச் சங்கிலி, 3 தங்க வளையல்கள் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகள், மற்றொரு அலமாரியில் வைத்திருந்த ரூ. 7 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பளுகல் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி சவரிமுத்து வழக்குப் பதிந்து, நகை, பணம் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com