நாடு பாதுகாப்பாக இருக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

இந்திய நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

இந்திய நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, தோவாளையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். கல்வியில் சிறந்த மாவட்டத்தைச் சேர்ந்த நீங்கள் யார் பிரதமராக வந்தால் நாட்டுக்கு நல்லது, யாரால் சிறந்த ஆட்சியை தர முடியும்,  என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
நாடு  செழிக்க, பாதுகாப்பாக இருக்க நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும்.  எனவே, இங்கு நமது கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
பொன்.ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதிக்கு நன்கு அறிமுகமானவர்.  அவர் எப்போது என்னை சந்தித்தாலும், குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை பகுதிகளுக்கும் தேவையான மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பேசுவார்.   ஆனால், எதிர்க்கட்சிகளின் சார்பில் நிற்கக்கூடிய வேட்பாளர் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.  அவர் இந்த மாவட்டத்தை பற்றி தெரியாதவர். அவர் எப்படி மாவட்டத்தின் குறைகளை களையமுடியும்? கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் பல கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழை நீர் கடலில் சேரும் இடங்களில் ஆயிரம் கோடி ரூபாயில் மக்கள் கேட்கும் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்படும். கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு பல கோடி மதிப்பில் ரோப்கார் மற்றும் பாலம் அமைக்கப்படும் என்றார் அவர்.
நாகர்கோவில் வடசேரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:  நாம் வளர்ச்சித் திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்கிறோம். ஸ்டாலின் திட்டங்களை பற்றி கூறாமல் பிரதமர் உள்பட எங்கள் கூட்டணிக்க ட்சித் தலைவர்களை தரக்குறைவாக பேசி வருகிறார். 
திரைப்படத்தில் உள்ளது போல் கதை, திரைக்கதை வசனம் எழுதி பேசுகிறார். பித்து பிடித்தவர் போல் அவர் பேசி வருகிறார். 
கடந்த தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட கட்சிகள் எல்லாம் சேர்ந்து இன்று வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளோம். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.  மண்ணின் மைந்தர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அவர். 
கூட்டத்தில், வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com